எதிர்வரும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் , சர்ச்சைக்குரிய ஏரிவாயு கசிவினால் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவங்களுக்கு காரணமான அனைவரையும் தண்டிப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விவசாயப் பொருளாதாரத்தை உருவாக்குவதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம், மாறாக பொருளாதார மந்தநிலையை உருவாக்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த குற்றங்களுக்கு காரணமானவர்கள் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

சதொச விற்பனை நிலையங்கள் மூலம் சலுகை விலையில் பொருட்களை வழங்குவதாக பல அரசாங்கம் உறுதியளித்த போதிலும், பெரும்பாலான விற்பனை நிலையங்களில் போதிய கையிருப்பு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சலுகைகளை வழங்குவதற்குப் பதிலாக, பிரச்சினைகளைப் பெருக்கும் அரசாங்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.

எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் விஞ்ஞான முறைகள் மூலம் நடைமுறை தீர்வுகள் தேடப்படும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி