1200 x 80 DMirror

 
 

முல்லைத்தீவு மூங்கிலாறு கிராமத்தில் சட்ட விரோத கருக்கலைப்புக்கு முயற்சித்து கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி, கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப் பட்டுள்ளது.

குறித்த சிறுமி கடந்த 15 ஆம் திகதி காணாமல் போனதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் தாயாரால் முறைப்பாடு பதிவு செய்யபட்டுள்ளது. அதற்கு அமைவாக நான்கு நாள் தேடுதலின் பின்னர் கைவிடப்பட்ட வளவு ஒன்றில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

பின்னர் சிறுமியின் சடலம் மீதான சட்ட மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நேற்றைய தினம் மருத்துவ அறிக்கை வெளியாகியிருந்தது. அதன்படி வன்புனர்வுக்கு உள்ளாகி கருத்தரித்த பின்னர் சட்ட விரோதமான முறையில் கருக்கலைப்புக்கு முயற்சித்து அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டு சிறுமி உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி மூங்கிலாறு கிராமத்தின் பெண்கள்,சிறுவர்கள்,இளைஞர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து கறுப்புக் கொடிகள் மற்றும் கறுப்பு பட்டிகளை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மூங்கிலாறு சந்தியிலிருந்து உடையார்கட்டு மகா வித்தியாலயம் வரை பேரணியாகச் சென்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி