கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பட்டதாரிகள் செயற்பட்ட விதம் முன்னுதாரணமானதும் சிறந்த சாதனையும் ஆகும் என தென் இலங்கையின் ராமண்ணா மஹா நிக்காயவின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையின் மூலம் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் தமது துணிச்சலையும் சுயமரியாதையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் கூறிய செய்தியை ஜனாதிபதியும் அரசாங்கமும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை மகாநாயக்க தேரர், பிக்குகள் உட்பட அனைத்து மதத் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டுமென சோபித தேரர் தெரிவித்தார்.

எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கலாநிதி ஓமல்பே சோபித தேரர் இதனை தெரிவித்தார்.

அவமானங்களுக்கும் கேலிக்கும் உள்ளான பதவிகளையே அரசாங்கம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதை ஜனாதிபதி புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

நண்பர்களை நியமித்ததன் மூலம் முழு நாடும் சீரழிந்துள்ளதாக சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

வீடியோ வெளிவருகிறது!

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் வழங்கும் சான்றிதழ்களை ஏற்க மறுக்கும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சில மாணவர்கள் கறுப்பு பட்டிகளை அணிந்து வருதையும் காணலாம்.

எவ்வாறாயினும், சமூக வலைத்தளங்களில் கூறப்படுவது போன்று விருதுகளை பெறுவதில் மறுப்பு இல்லை எனவும், மருத்துவ பீட மாணவர்கள் தாமாகவே விருதுகளை பெற்றுள்ளனர் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி