ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது அரசாங்கத்தில் உள்ள சிறிய கட்சிகளுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஏற்கனவே நாடு அராஜக நிலைமைக்கு சென்றுள்ளதாகவும் பிரச்சினைகளுக்கு மத்தியில் அரசாங்கம் தடவி தேடிக்கொண்டிருப்பதாகவும் சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச      (Rohana Lakshman Piyadasa) குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாடு மிக வேகமாக அராஜக நிலைமையை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது.

எதனை செய்ய முடியாத அணி மக்கள் அரசாங்கத்தை கருதுகின்றனர். இதனால், இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும். எதிர்க்கட்சிகள், சிறிய கட்சிகளுடன் நட்புறவாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும்.

ஆனால், அரசாங்கம் எதனையும் செய்வதில்லை. பாரதூரமான பிரச்சினை எதிரில் இருக்கும் போது அரசாங்கம் வெறுமனே தடவிக்கொண்டிருக்கின்றது.

நாடாளுமன்றத்தில் தமது உறுப்பினர்களை கூட கட்டுப்படுத்த முடியாத நிலைமைக்கு அரசாங்கம் சென்றுள்ளது. நாடு படிப்படியாக அதிகாரவாத நிர்வாகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது எனவும் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி