உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையின் பொருத்தமான சீர்திருத்தங்களை இனங்கண்டு தேவையான திருத்தங்களை பரிந்துரைப்பதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் கூட்டத்தில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரான நிமல் புஞ்சிஹேவா இதனைக் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் 2022 மார்ச் 20 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபை தேர்தல்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு குறைந்தது 04-மாதங்களுக்கு முன்னதாகவே தயார்படுத்துவது இன்றியமையாதது என அவர் மேலும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி