இந்த நாட்டின் அரசியலில் நேர்மையான, ஊழல் செய்யாத, மோசடி செய்யாத மற்றும் தேசபக்தியுள்ள மக்களை ஒன்றிணைப்பதன் மூலம் பரந்த வலிமைமிக்க படையொன்று கட்டியெழுப்பப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அந்த சக்தியினூடாக நாட்டின் எதிர்காலத்தை மேம்படுத்த வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (8) நடைபெற்ற ரணவிரு பிரதிபா பிரணாம விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அனைவரினதும் கூட்டமைப்பினால் 28வது முறையாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி, உரம், எரிவாயு மற்றும் பொருட்களின் விலைகள் தொடர்பில் ஒருவர் மீது ஒருவர் சுட்டிக் காட்டாமல் அரசாங்கம் தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டின் விவசாயிகள் உரம் இன்றி மிகவும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, எங்கும் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதால் பொது மக்கள் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

தற்போதுள்ள பாரிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட்டு துன்பப்படும் நாட்டு மக்களுக்கான பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் எனவும், இது தொடர்பில் அரசாங்கத்திற்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கு தமது கட்சி நடவடிக்கை எடுக்கும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி