தனது ஆட்சியின் கீழ் விவசாயிகளுக்கு இந்தளவு பிரச்சினைகளை ஏற்படுத்த இடமளிக்க மாட்டாதெனவும், தான் இந்த அரசாங்கத்துடன் எவ்வளவுதான் பேசினாலும் அவர்கள் செவிமடுப்பதில்லையெனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

மாத்திரமல்ல, தற்போதைய விவசாய அமைச்சருக்கு வரம்பில் எப்படி நடப்பது என்பது கூடத் தெரியாதெனவும் கூறியுள்ளார்.

பகமூன நகர மத்தியில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள் விவசாயிகளை சந்திக்கச் சென்ற போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

மொரகஹகந்த மற்றும எலஹர விவசாயிகள் திட்டத்தின் 41 அமைப்புகள் இணைந்து விவசாயத்திற்கு உரம் வேண்டுமெனக் கேட்டு கடந்த 24ம் திகதி தொடர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி