ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ  விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவிற்கு   எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மஹிந்தானந்த அளுத்கமகேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரசாயன உரங்கள் குறித்து தற்போது சமூகத்தில் எழுந்துள்ள பிரச்சினைக்கு அவரெ பொறுப்பேற்க வேண்டும் என குற்றம் சுமத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

விவசாய அமைச்சரின் செயலாளராகக் கடமையாற்றும் மேஜர் ஜெனரல் சுமேத பெரேராவை பதவியிலிருந்து விலக்க விவசாய அமைச்சருக்கு இருந்த விருப்பத்தை ஜனாதிபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

அத்துடன் இரசாயன உரத் திட்டத்தை சுமேதரவுடன் செய்ய முடியாது என்று மஹிந்தானந்தா ஜனாதிபதியிடம் பலமுறை கூறியுள்ளதாகவும், மஹிந்தானந்தாவுக்கு பழக்கப்பட்ட நபரை அதில் இணைத்துக் கொள்ள விரும்பியதாகவும் தெரிய வந்துள்ளது.

இறுதியில், ஜனாதிபதி மஹிந்தானந்தாவின் வார்த்தைகளிலிருந்து தப்பிக்க முடியாத இடத்தில் சுமேதவை நீக்கி, மஹிந்தானந்த விரும்பும் நபருக்கு அனுமதித்தார். நியமிக்கப்பட்ட உடனேயே, "இது ஒரு எளிய வியம், ஐயா என மஹிந்தானந்தாவின் செயலாளர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்குத் தேவையான இயற்கை உரத்தை 100% உற்பத்தி செய்ய முடியும் என்று அவர்கள் பெருமை பேசினார்கள். ஆனால் உரம் நெருக்கடி தொடரும் நிலையில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்ததால், மஹிந்தானந்தாவும் அவரது செயலாளரும் நாட்டின் உரத் தேவையில் 25 சதவீதத்தை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என்று கூறினர்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி