தஹாம் சிறிசேன, பொலன்னறுவை தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இளைஞர் கூட்டமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தஹாம் சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகனாவார்.

தஹாம் சிறிசேன அந்தப் பதவிக்கான கடிதத்தை ஒப்படைத்ததும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அங்கீகரித்தார்.

தஹாம் சிறிசேனவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பதவி வழங்கப்படுவது இதுவே முதல் முறை.

புதிய கூட்டணி

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான புதிய கூட்டணியை உருவாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளதாக நெத் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்கால கூட்டணியில் சிறுபான்மை கட்சியாக கருதப்படாது என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி