இந்தியா மற்றும் இலங்கை மீனவர்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபட்டு வந்த மீனவப் போராளி பாம்பன் யு.அருளானந்தத்தின் திடீரென மரணம் மீனவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கடந்த 50 ஆண்டுகளாக மீனவர் உரிமைக்காகவும், நலத்துக்காகவும் போராடி வந்தவர்தான் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த யு.அருளானந்தம்.

இரு நாட்டு கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் பற்றி ஆட்சியாளர்களுக்கும் சர்வதேச ஊடகங்களுக்கும் தெளிவாக வெளிப்படுத்தியவர்.

இந்திய எல்லைக்குள் கைதாகும் இலங்கை மீனவர்களின் நலனுக்காகவும் மிகவும் பாடுப்பட்டவர். மீனவர் பிரச்சனைகளுக்காக மட்டுமல்லாமல் பல்வேறு சமூகப் பிரச்னைகளுக்காகப் பாடுபடும் ஜனநாயக அமைப்புகளோடு இணைந்து போராடியவர்.

யு.அருளானந்தம் நிரபராதி மீனவர் சங்கத் தலைவராகவும், தீவு மீனவ சங்கத் தலைவராகவும், தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைபின் ஒருங்கிணைப்பாளராகவும் சேவையாற்றியுள்ளார்.

 மீனவப் போராளி பாம்பன் யு.அருளானந்தத்தின் இந்த திடீர் மறைவு தமிழகம் முழுவதுமுள்ள மீனவர்கள் மட்டுமல்லாது, இலங்கை மீனவர்களை மிகவும் . கவலையடைய செய்துள்ளது. மேலும் இவருடைய பலரும் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி