ஆசிரியர்-அதிபர் போராட்டத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்கும் இரண்டாவது ராஜபக்ச கூட்டணி அரசாங்கத்தின் முன்னணி அமைச்சர் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கின்ற எச்சரிக்கையின் நேர்மை கேள்விக்குறியாகியுள்ளது.
”தோட்ட நிறுவனங்கள் தன்னிச்சையாக ஊதியத்தை உயர்த்தாமல் தொழிலாளர்களுக்கு பல்வேறு பணி சுமைகளை விதித்து ஒரு பேரரசை உருவாக்கியுள்ளன. இதற்கு எதிராக  தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்படும் என, அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வியாழக்கிழமை (07) தெரிவித்துள்ளார்.

சுமார் மூன்று மாதங்களாக தீர்வை வழங்காமல் சம்பள முரண்பாடுகளை நீக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஆசிரியர்-ஆசிரியர் போராட்டத்தை ஒடுக்க அரசு முயன்றுள்ள பின்னணியில் அமைச்சரால் இந்த முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் கூற்றுக்கு அமைய, முறையான துறையில் தொழிலாளர்களின் அடிப்படை ஊதியம் 4.2 சதவீதம் குறைந்துள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் நிலையில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அவசியமாகின்றது,  தோட்ட நிறுவனங்கள் நாளாந்தம் 1000 ரூபாயை செலுத்துவதில்லை என அமைச்சர் நாணயக்கார குற்றம் சாட்டுகிறார்.

"இந்த நிறுவனங்கள் பறிக்கும் தேயிலை கொழுந்தின் அளவை அதிகரிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கின்றன, அல்லது அவர்கள் கொடுப்பனவை வழங்குவதில்லை. அரசாங்கம் இப்போது இந்த விடயத்தை சம்பள நிர்ணயச் சபைக்கு அனுப்பியுள்ளது. தோட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கிடையிலான கூட்டு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாததன் காரணமாக தோட்ட முகாமையாளர்கள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர்.”  

உர தட்டுப்பாடு

கோட்டாபய ராஜபக்ச அரசால் விதிக்கப்பட்ட இரசாயன உரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஜனவரி மாதமளவில் தேயிலை உற்பத்தி குறைவடையும் என  பெருந்தோட்ட நிறுவனங்களின் சங்கம் எச்சரித்துள்ளது.

தேயிலை உற்பத்தியில் ஏற்படும் வீழ்ச்சி தோட்ட தொழிலாளர்களின் ஊதியத்தை நேரடியாக பாதிக்குமென, பெருந்தோட்ட நிறுவனங்களின்  ஊடக பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தை உறுதிப்படுத்தும் வகையில், சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.எல்.குணரத்னவும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

"சுமார் 70 ஆண்டுகளாக தொழிற்சங்க உறுப்பினர் பணத்தை தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து கழித்து தொழிற்சங்கங்களுக்கு கொடுப்பது ஒரு பாரம்பரியம்.
தொழிற்சங்கங்களை முடக்கும் வகையில் இப்போது தோட்ட நிறுவனங்களால் இது கைவிடப்பட்டுள்ளது. அத்தகைய உறுப்பினர் கட்டணத்தைப் பெறாவிட்டால் தொழிற்சங்கங்கள் எவ்வாறு முழுநேர உறுப்பினர்களைப் பராமரிக்க முடியும்?” என
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கேள்வி எழுப்பியுள்ளார்.

பெருந்தோட்டத் துறையை மேற்பார்வையிடுவதற்கான அதிகாரசபையை நிறுவுதல் என்ற ராஜபக்ச அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாத சூழலில் தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக தோட்டத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை அழைப்பதைத் தவிர வேறு தீர்வு இல்லாததால் அனைத்து அரச மற்றும் எதிர்க்கட்சி தொழிற்சங்கங்களும் அழைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் 'முதலை கண்ணீர்'

அத்தகைய நேர்மையான நோக்கம் இருந்திருந்தால், அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்திற்கு தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தி, அதனை சரியான நடைமுறையில் வழங்க பல வாய்ப்புகள் காணப்பட்டதாக,  தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை 1,000 ரூபாயாக உயர்த்த போராடிய தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளை உள்ளடக்கிய, ”1000 இயக்கம்” குறிப்பிட்டுள்ளது.

"ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்ற பின்னரும், ஒவ்வொரு ஆண்டும் வரவு செலவுத் திட்டங்களின்போதும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதியம் உட்பட நிவாரணம் வழங்குவதற்கு போதுமான வாய்ப்புகள் காணப்பட்டன.  எனினும் சம்பள உயர்வு போராட்டத்திற்கு எவ்வித பங்களிப்பையும் செய்யாமல், இப்போது முதலை கண்ணீர் வடிப்பதாக, அந்த இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் சிந்தக ராஜபக்ச கூறியுள்ளார்.

நாடு முடக்கப்பட்டிருந்தாலும், சுற்றுலா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் கூட, பணிக்கு அழைக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கல் மற்றும் பிற சலுகைகளின் விடயத்தில், முறையான திட்டங்கள் செயல்படுத்தப்படாத நிலையில், நிறுவனங்கள் விதிக்கும் தீவிரமான வேலை நிபந்தனைகளுக்கு எதிரான தொழிலாளர்களின் எதிர்ப்பைத் தணிப்பதைத் தவிர, இந்த அரசாங்கத்தின் பங்காளிகளுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி