நுவரெலியா − ராகலை பகுதியிலுள்ள தனி வீடொன்றில் நேற்றிரவு 10.30 மணியளவில் பரவிய தீயினால் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 1 மற்றும் 11 வயதுகளுடைய குழந்தைகளும் அடங்குவதாக தெரியவருகின்றது.

மேலும், உயிரிழந்தவர்களின் இரண்டு பெண்களும் அடங்குகின்றனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், ராகலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, இத்தீப்பரவல் இடம்பெற்ற போது, குறித்த வீட்டிலிருந்த 35 வயது மகன் வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளதாக விசாரணையில்   தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவம் நடந்த வீட்டில் உயிரிழந்த ஒருவயது சிறுவனுக்கு நேற்று (07) முதலாவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி