அணி அணியாக பிளவுபடும் தருவாயில் இருக்கும் கட்சியிலிருந்து தன்னை நீக்குவதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பது நகைப்புக்குரியது என தயா கமகே தெரிவித்துள்ளார்.

கட்சியின் உரிமையாளராக இருக்கும் தன் மீது எப்படி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும் ம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார டயானா கமகேவை கட்சியிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த டயானா கமகே,

அணி அணியாக பிளவுபடும் தருவாயில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி கேலி செய்வதை நிறுத்தி எதிர்க்கட்சியின் பாத்திரத்தை சரியாக செய்ய வேண்டுமெனக் கூறினார்.

அதோடு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கட்சியை சர்வாதிகாரத்தை நோக்கி வழிநடத்துவதால், கட்சி பிளவுபடும் நிலை உள்ளதாக கூறிய அவர், கேலி செய்வதை விட கட்சியை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று டயானா கமகே தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி