பாராளுமன்றத்தில் இன்று (4) காலை நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை கைது செய்து தடுப்பு காவலில் வைப்பதிருப்பது தொடர்பாக அரச மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையே நடந்த விவாதத்தால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது இருக்கையில் அமர்ந்தபோது இந்த சம்பவம் நடந்தது.

இந்த சூடான சூழ்நிலை நீண்ட நேரம் நீடித்ததால் சபையை கட்டுப்படுத்த சபாநாயகர் கடுமையாக செயற்பட வேண்டியிருந்தது.

இதோ அங்கு நடந்த உரையாடல்.

எதிர்க்கட்சியின் தலைமை அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல:

ரிஷாத் பதியுதீன் 100 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். குற்றப்பத்திரிகை இல்லை. அவர் கைது செய்யப்படுவார் என்று சபாநாயகருக்கு தெரிவிக்கப்படவில்லை. அவரது வழக்கு நான்கு முறை ஒத்திவைக்கப்பட்டது. பிரிட்டிஷ் பாராளுமன்ற பாரம்பரியம் இங்கேயும் பொருந்தும். இந்தச் சம்பவத்தால் அவரது சலுகைகள் மீறப்பட்டுள்ளன. அவரை விடுவிக்குமாறு கோருகிறோம்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன:

அவர் கைது செய்யப்படுவார் என்று எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரியெல்ல:

என்ன காரணம்

சபாநாயகர்:

ஒரு விசாரணைக்கு

கிரியெல்ல:

விசாரணை என்று சொல்ல முடியாது. காரணம் சொல்லப்பட வேண்டும்.

(சபையில் சத்தம்)

அரசாங்கத்தின் தலைமை அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ:

அன்று நாங்கள் கைது செய்யப்பட்டோம். அதற்கு எந்த காரணமும் இல்லை. நாங்கள் கைது செய்யப்பட்ட போது முன்னாள் சபாநாயகர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அப்போது பாரம்பரியம் என்ன?

கிரியெல்ல:

இது எங்கள் இருபாலாரையும் பாதிக்கிறது. இது போன்ற விஷயங்கள் எதிர்காலத்தில் உங்களுக்கும் நடக்கலாம்.

சபை தலைவர் தினேஷ் குணவர்தன:

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை நடைபெறும்போது மற்றொரு விசாரணை.இதில் தெளிவாக இருக்க வேண்டும். இங்கு பொய்களைக் கூறுவதில் அர்த்தமில்லை.

(சமகி ஜன பலவேக உறுப்பினர்கள் கூச்சலிடுகின்றனர்.)

ரிஷாத் பதியுதீன்:

நான் கைது செய்யப்பட்டு 92 நாட்கள் ஆகிவிட்டது. விசாரணை ஐந்து நாட்கள்தான் நடந்தது. 24 மணி நேரமும் இருண்ட அறையில் இருக்கிறேன். என்னை கைது செய்வதற்கு எந்த காரணமும் இல்லை, ஜனாதிபதி அவர்களே எனது அமைச்சில் பாலசுப்பிரமணியம் என்ற செயலாளர் இருந்தார். அவரின் தொலைபேசி உரையாடலுக்காக நான் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ:

அவர் பாலசுப்பிரமணியம் என்ற நபரைப் பற்றி கூறினார்,அவர் இப்போது நாட்டை விட்டு ஓடிவிட்டார்.அதையும் தெரிந்து கொள்ளுங்கள்

(இச்சந்தர்ப்பத்தில், ஜனாதிபதி பிரதமருடன் உரையாடுதை காணமுடிந்தது.)

(லங்காதீப)  

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி