சோமாலியா நாட்டில் கால்பந்து வீரர்கள் சென்ற பேருந்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர். சோமாலியா நாட்டில் கிஸ்மாயோ நகரில் கால்பந்து வீரர்களுடன் சென்று கொண்டு இருந்த பேருந்தில் குண்டு வெடித்தது. இதில் 5 பேர் பலியானார்கள். 25 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.  இந்த சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்க வில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் முகமது அப்துல்லாஹி முகமது , குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு அல் கொய்தாவுடன் தொடர்பில் இருக்கும் அல் ஷபாப் அமைப்பே காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி