பொத்துவிலில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் வீடு திரும்பாத நிலையில் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த 23 ஆம் திகதி அதிகாலை பொத்துவில் அறுகம்பை மீன்பிடித் துறையிலிருந்து OFRP -A- 1456- KMN எனும் இலக்க அடையாளம் கொண்ட இயந்திரப்படகில்  கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

பொத்துவில் களப்புக்கட்டு பகுதியைச்  சேர்ந்த 52 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான மொகமட் தாஹா என்பவரும்  பொத்துவில் பசரிச் சேனையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடைய  ஜெளபர் தாஜுதீன் ஆகிய இருவரும் ஒரு வாரமாகியும் இதுவரை வீடு திரும்பாத நிலையில் காணாமல் போயுள்ளனர்.

கடந்த 23ம் திகதி அதிகாலை வீட்டில் இருந்து 5 லீட்டர் குடி நீரும் , 8 ஆப்பயுடனுமே அவர்கள் கடலுக்கு சென்றதாக அறியக்கிடைக்கின்றது. தினமும் அதிகாலை கடலுக்கு மீன் பி்டிக்கச் சென்றால் மதியம் வீடு திரும்பிவிடும் அவர்கள் இன்றுடன் ஒரு வாரமாகியும் வீடு திரும்பவில்லை என  அவர்களது குடும்பம் கண்ணீரோடு தேடி தெரிவிக்கின்றனர்.

அரசாங்கம் இவர்கள் தொடர்பான தகவலை மிக விரைவாக வழங்க வேண்டும் என உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி