நாட்டிற்கு திரும்பியுள்ள சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த பிறகு நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்கவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

அரசாங்க உள்வட்டார தகவளின்படி, சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியலின் உறுப்பினரான ஜனாதிபதி சட்த்தரனி ஜயந்த வீரசிங்க நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளதால் அந்த இடத்திற்கு பசில் ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளார்.

ராஜினாமா செய்யும் ஜயந்த வீரசிங்க அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி சட்டத்தரனி ஜயந்த வீரசிங்க கொழும்பு ராஜகீய கல்லூரியின் பழைய மாணவராவார்.அவர் பின்னர் கொழும்பு சட்ட பீடத்தில் நுழைந்து 1976 இல் சட்டத்தரனியாக பட்டம் பெற்றார்.

அவர் 2010 இல் ஜனாதிபதி சட்டத்தரனியாக பதவியேற்றார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் அவர் ராஜபக்சர்களின் சட்ட பங்களிப்பாளர்களில் ஒருவராக இருந்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சட்ட ஆலோசகராகவும் ஜனாதிபதி சட்டத்தரனி ஜயந்த வீரசிங்க பணியாற்றியுள்ளார்.

முகமது பலீல் மர்ஜான்

cDA5H3VE 400x400

இதற்கிடையில், சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினறும் தொழிலதிபருமான மொஹமட் பலீல் மர்ஜானும் பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க ஆர்வம் காட்டியதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தி லீடரிடம் தெரிவித்தார்.

தொழிலதிபரான மொஹமட் பலீல் மர்ஜான் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பராவார்.

ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் முன்னாள் அமைச்சரும் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளதாக பலவெகு ஜன ஊடகங்கள் மற்றும் பொதுஜன பெரமுனவின் ஊடக அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக, சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் பசில் ராஜபக்ஷ சார்பு அரசாங்க ஆர்வலர் 'தி லீடர்' வலைத்தளத்திடம், நாட்டை நெருக்கடியிலிருந்து காப்பாற்றத் தேவையான சக்திவாய்ந்த அமைச்சு பதவிகளை பசில் ராஜபக்ஷ பொறுப்பேற்கக்கூடும் என்று கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:

பசிலின் அரசியல் கடந்த காலங்களில் நாடாளுமன்றத்திற்கு வெளியே நடந்து வருகிறது. பசில் ராஜபக்ஷவின் அரசியல் வாழ்க்கை எப்போதும் நாடாளுமன்றத்திற்கு வெளியே இருக்கும் என்று அர்த்தமில்லை. எல்லாவற்றிற்கும் ஒரு திட்டவட்டமான நேரம் உள்ளது. அந்த திட்டவட்டமான நேரம் எதிர்காலத்தில் வரும்.

“இந்த நாட்டின் முற்போக்கான மக்கள் அவரை நாடாளுமன்றத்திற்கு வரச் சொல்லும் நாள் விரைவில் வரும். எண்ணெய் விலைகள் உயரும் நேரத்தில் அரசாங்கத்தில் ஒரு முக்கியமான அமைச்சு பதவியை வகிக்காததன் விளைவுகளை ஒரு நாடு அனுபவித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கும்பல்களின் நடனமாடாத ஒரு கட்சியாக சிறீலங்கா பொதுஜன பெரமுனவை நிறுவுவதற்கு அவரது தொலைநோக்கு பார்வையும் பொருளாதாரத்தைப் பற்றிய அறிவுமே முக்கிய காரணமாகும்.

அது மட்டுமல்லாமல், ராஜபக்ஷர்களுக்காக இந்த நாட்டின் முற்போக்கான மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் பராமரிக்கக்கூடிய சுறுசுறுப்பான ராஜபக்சர்களில் அவர் முன்னணியில் உள்ளார்.

அதன்படி, அவர் நாடாளுமன்றத்திற்கு வந்து நாட்டை நெருக்கடியிலிருந்து காப்பாற்ற தேவையான சக்திவாய்ந்த அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொள்வார். ஆனால் அவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் நிகழும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி