குற்றப் புலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவும் உதவிப் பொலிஸ் பரிசோதகர் மென்டிஸும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை ஆறுதலையும் நம்பிக்கையையும் அளித்தாலும் அவர்களது பாதுகாப்புத் தொடர்பான அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறதாக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே அகிம்சா விக்கிரமதுங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸாரால் நிரூபிக்க முடியாத குற்றத்துக்காக இலங்கையின் மிகச் சிறந்த குற்ற விசாரணை அதிகாரியான ஷானி அபேசேகர சுமார் ஒரு வருடகாலம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.

ஷானி அபேசேகர மற்றும் அவரின் கீழ் பணியாற்றிய குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் அச்சமின்றி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் காரணமாகவே எனது தந்தை லசந்த விக்கிரமதுங்கவுக்கும் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் என்ன நேர்ந்தது என்பதை அறிந்து கொள்ள முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அதிகாரிகள் அவர்களது தைரியமான செயற்பாடுகளின் காரணமாக பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். இத்தகைய துன்புறுத்தல்களை முறியடிப்பதற்காகப் பயணிக்க வேண்டியுள்ள நீண்ட பாதையில், ஷானி அபேசேகரவின் விடுதலை என்பது முதற்படி மாத்திரமேயாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் வேறு எந்தவொரு தரப்பினரும் பதிலளிக்க முன்வராத சந்தர்ப்பத்தில், நீதியைப் பெறுவதற்கான எனது பிரார்த்தனைகளுக்கு ஷானி அபேசேகரவும் அவரது அதிகாரிகளும் பதில் வழங்கினார்கள். வரலாற்றின் வளைவுகள் அவர்களுக்கான நீதியை உறுதிசெய்வதை நோக்கி நகர்த்திச்செல்லும் என்று முன்னெப்போதையும் விட இ;ப்போது அதிகமான நம்புகின்றேன் என்றும் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி