பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் கூழ்தர் பகுதியில் இருந்து லர்கனோ பகுதிக்கு பயணிகளுடன் சென்ற பேருந்து கவிழ்ந்து  விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் பலியானார்கள். 30 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பேருந்து அதிவேகமாகச் சென்று வளைவில் திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் அளவுக்கதிமாக பயணிகள்  பயணித்ததாகவும் பேருந்தின் மேற்கூரையில் கூட பயணிகள் பயணித்து வந்துள்ளனர் எனவும் உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். 

மேலும் விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. பேருந்தில் பயணித்தவர்கள் கூழ்தர் பகுதியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு சொந்த ஊர் திரும்பியவர்கள் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி