தற்போது விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை சிலவேளை ஜூன் 14ம் திகதிக்கு பின்பும் நீடிக்கப்படக் கூடுமென கண்டியில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போது அமைச்சர் கெஹெலிய ரம்புக்வல கூறியுள்ளார்.

எதிர்வரும் தினங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்து கூற முடியாதென்றாலும், சிலவேளை பயணத் தடை நீடிக்கப்பட்டால் பொது மக்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படுமெனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

இருந்தபோதிலும், பயணத் தடை காரணமாக மக்கள் வீடுகளிலேயே தங்கியிருந்தால் எதிர்வரும் 14ம் திகதிக்குப் பின்னர் பயணத்தடையை நீக்கக் கூடியதாக இருக்குமென பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி