மொரட்டுவ நகர சபை மேயர் சமன்லால் பெர்னாண்டோ கைதுசெய்யப்பட்டுள்ளார். பெண் வைத்தியரை அச்சுறுத்தியமை மற்றும் சுகாதார அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டுக்காக அவர் கைதாகியுள்ளார்.

அவர் இன்று காலை கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையிலேயே அவரை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவ மற்றும் மொரட்டுமுல்ல கிராம சேவகர் பிரிவுகளில் உள்ளவர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசிகளை வழங்கச் சென்ற பெண் வைத்தியருக்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் அவர் அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கல்கிஸ்ஸை பொலிஸாரிடம் வைத்தியர் அளித்த முறைப்பாட்டுக்கு அமைவாக தற்சமயம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந் நிலையில் கைதுசெய்யப்பட்ட மேயர் மொரட்டுவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி