முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார கூறுகையில், சஜித் பிரேமதாச, ரிஷாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் ஆகியோர் அரசாங்கத்துடன் டீல் வைத்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க அரசாங்கத்துடன் ஒரு டீல் வைத்திருப்பதாக பலர் கூறினாலும், அரசியலமைப்பின் 20 வது திருத்தத்திற்கு சஜித் அணியினர் வாக்களித்தபோது அந்த டீலை யார் செய்துள்ளார்கள்  என்பது தெளிவாகிறது என என்று பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச கட்சியின் உரிமையாளர் டயானா கமகேவை ஆளும் கட்சியிடம் ஒப்படைத்ததாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியுதீன், மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் சஜித் பிரேமதாசவுடன் தங்கியிருந்து தங்கள் கட்சி உறுப்பினர்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

20 ஐ ஆதரித்ததன் மூலம், டீல் யாருடன் இருந்தது என்பது தெளிவாகியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி