இன்று (15) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதிக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூன் 10ஆம் திகதி வரை அந்த இறக்குமதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தொழிற்சாலைகளுக்குத் தேவையான அயடின் கலந்த உப்பு மற்றும் நுகர்வுக்காக அயடின் கலந்த உப்பை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.