அம்பாறை - மஹியங்கனை வீதியின் மஹியங்கனை - வேவத்த பகுதியில் அதி சொகுசு பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து, இன்று (14) அதிகாலை 2.30 மணியளவில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
மஹியங்கனை பொலிஸாரைத் தொடர்பு கொண்டபோது, பஸ்ஸில் இருந்த எவருக்கும் விபத்தில் பெரியளவில் காயம் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர்.