இன்று (06) மதியம் 12 மணி வரையான நிலவரப்படி, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு
வீதம் 30% ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.
இன்று மாலை 4 மணி அளவில் பொது மக்கள் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதுவரை பதிவாக வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு,
கொழும்பு - 28%
கேகாலை - 33%
திகாமடுல்ல - 31%
புத்தளம் - 30%
அநுராதபுரம் - 30%
பொலன்னறுவை - 34%
பதுளை - 36%
இரத்தினபுரி - 30 %
மன்னார் - 40 %
திருகோணமலை -36%
காலி - 35%
மாத்தறை - 42%