ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 4.43 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக

ஐரோப்பிய - மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மாகாணம் பஹ்லன் நகரில் இருந்து 164 கிலோமீற்றர் தொலைவில் 75 கிலோமீற்றர் ஆழத்தில் 5.9 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்வடைந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வீட்டை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தெற்கு பிலிப்பைன்ஸிலும் 5.6 ரிச்டர் அளவுகோல் அளவில் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.

அந்நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்த நிலநடுக்கங்களால் அந்த இரு நாடுகளிலும் சொத்து அல்லது உயிர் சேதம் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி