பொதுமக்களின் தேவைக் கருதி, இன்றும் (16) பஸ்கள் இயக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளaது.
வழக்கமான நேர அட்டவணைக்கு அமைவாக இன்று (16) பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செயல்பாடுகள் மற்றும் சேவை மேற்பார்வை பணிப்பாளர் ஷெரீன் அதுக்கோரல தெரிவித்தார்.
புத்தாண்டை முன்னிட்ட தங்களது ஊர்களுக்குச் சென்ற பயணிகளுக்காக நாளை (17) முதல் விசேட பஸ் சேவைகள் இயக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அலுவலக ரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நாளை (17) முதல் பல விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.