பாராளுமன்றத்தில் பேசப்பட்ட விதத்தில், நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் இயங்கியதாகக் கூறப்படும்

சித்திரவதை முகாமான படலந்தைப் போன்று இலங்கையில் அரச அனுசரணையுடன் சித்திரவதை முகாம்கள் பல இருந்ததை உறுதிப்படுத்தும் சில தகவல்களை, இலங்கையில் காணாமற்போனோர் தொடர்பான பல ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் செயலாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சியின் போது காணாமல் போனவர்கள் குறித்து விசாரிக்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவால் நியமிக்கப்பட்ட மத்திய மண்டல ஆணையத்தின் செயலாளர், இலங்கையில் சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் (ITJP), இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் (JDS) மற்றும் இலங்கை பிரச்சாரம் (SLC) ஆகியவை இணைந்து, சமூக ஊடகங்களில் வெளியிட்ட காணொளியின் ஊடாகவே இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

SRI-LANKAN-TORTURE-SITES.jpg

மாத்தளை சித்திரவதைக் கூடங்கள் மற்றும் காணாமல்போன சம்பவங்களில் கோட்டாபய ராஜபக்ஷவின் பங்கு குறித்து 2022ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கைகளை விசாரிக்க எந்த அரசாங்கமும் ஆர்வம் காட்டவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ITJP மற்றும் JDS ஆகியவற்றால் இந்த அறிக்கைகள் தொகுக்கப்பட்டன. இலங்கையில் 200க்கும் மேற்பட்ட சித்திரவதைக் கூடங்கள் காட்டப்பட்ட முதல் வரைபடம் இதுவாகும்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அல் ஜசீரா சர்வதேச ஊடக வலையமைப்பு, பட்டலந்த வதை முகாம் குறித்து கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, எதிர்வரும் தேர்தலில் இலாபம் பெறும் நோக்கத்தில், மேற்படி சித்திரவதைக் கூடம் குறித்து நாடாளுமன்ற விவாதத்தை நடத்த தற்போதைய அரசாங்கம் ஆர்வமாக உள்ளது.

கடந்த தசாப்தத்தில், மாத்தளை, மன்னார், கொக்குத்தொடுவாய் மற்றும் கொழும்புத் துறைமுகம் ஆகிய இடங்களில் பாரிய புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், இந்த விடயங்களில் நாடாளுமன்ற விவாதங்களை நடத்துவதற்கு எந்த அரசாங்கமும் முன்மொழியவில்லை.

1980களின் பிற்பகுதியில் நடந்த மனித உரிமை குற்றங்களை விசாரிக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவால் நிறுவப்பட்ட காணாமல் போனோர் தொடர்பான மத்திய மண்டல ஆணையத்தின் செயலாளர் எம்.சி.எம்.இக்பால் வெளிப்படுத்திய, இன்று அனைவரின் கவனமும் திரும்பியுள்ள பட்டலந்த, மற்றொரு சித்திரவதை கூடம்தான்.

"ஆனால் பட்டலந்த என்பது, பாதுகாப்புப் படையினரால் நடத்தப்படும் பல தடுப்பு மையங்களில் ஒன்றாகும். உதாரணமாக, கண்டியில் உள்ள புனித சில்வெஸ்டர் கல்லூரியில் ஒரு சித்திரவதைக் கூடம் இருந்தது.

Ikbal.jpg

அந்த இடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மற்றவகளைப் போல இறப்பதற்குப் பதிலாக, தற்செயலாக தனது உயிரைக் காப்பாற்றிக்கொண்ட 'சான்ஸ் காரயா' என்ற செல்லப்பெயர் கொண்ட ஒரு இளைஞன், மத்திய பிராந்திய காணாமல் போனோர் ஆணையத்திற்கு அளித்த சாட்சியத்திலிருந்து இது பற்றி தான் அறிந்ததாக இக்பால் கூறுகிறார். சொல்வதைக் கேளுங்கள்.

இது, திரும்பி வர அனுமதிக்கப்படாத பல்லாயிரக்கணக்கானவர்களில் ஒருவரின் கதை மட்டுமே. இது, பதுளையில் உள்ள ஹாலிஎல மோட்டர்ஸ் சித்திரவதைக் கூடத்தைப் பற்றியது.

https://x.com/SLcampaign/status/1909656056642306527

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web