இலங்கையில் ஒட்டிசத்தால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக

லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஸ்வர்ணா விஜேதுங்க தெரிவித்துள்ளார்.

ஒட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 2009ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், இலங்கையில் 93 குழந்தைகளில் ஒருவருக்கு இந்த நிலை இருந்தது. அதன் பிறகு, அது தொடர்பான கணக்கெடுப்பு முறையாகச் செய்யப்படவில்லை.

ஒட்டிசத்தால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை உலகில் அதிகரித்து வரும் போக்கு உள்ளதுடன், இலங்கையிலும் அந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக நாங்கள் உணர்கிறோம்.

அதை மிக விரைவாக அடையாளம் காண்பது முக்கியமாகும். ஆரம்ப கட்டத்திலேயே அடையாளம் காண முடிந்தால், 90% பேரை இரண்டரை முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் சரிப்படுத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web