இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில்
குற்றவாளியாகக் காணப்பட்ட வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு, கொழும்பு உயர் நீதிமன்றம் தலா 16 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தது.
மேலும், பிரதிவாதிகளுக்கு தலா இரண்டு ,லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்தப் பிரதிவாதிகள் மீது, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தது. அவர்கள், சட்டவிரோதமாக ரூ. 100,000 பணத்தைப் பெற்று ஊழல் குற்றத்தைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
வடமத்திய மாகாண முதலமைச்சராக அவர்கள் பதவி வகித்த காலத்தில், எரிபொருள் கொடுப்பனவாக ரூ. 2,080,500ஐ வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.