ஏப்ரல் 7ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12.12 மணிக்கு, கொழும்பில் சூரியன் உச்சம்பெருவதால்,

எமது நிழல் சிறிது நேரத்திற்கு மறைந்துவிடும் என்று, வானியலாளர் அனுர சி. பெரேரா கூறுகிறார்.

இந்த காலகட்டத்தில், அதிகப்படியான சூரிய ஒளி மனித சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பொதுமக்கள் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

"இது உண்மையில் ஒரு ஒளியியல் மாயை. ஆண்டின் இந்த நேரத்தில், அதிகபட்ச சூரிய சக்தி பெறப்படுகிறது. அதாவது, ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில், சூரியன் நம் நாட்டின் மேல் அதன் உச்சத்தில் இருக்கும். இந்த உச்சநிலை, ஏப்ரல் 5 முதல் 15 வரை நீடிக்கும்.

“கொழும்பில் சூரியன், ஏப்ரல் 7ஆம் திகதி உச்சம் பெருகிறார். அன்று நண்பகல் 12:12 மணிக்கு யாராவது வெளியே இருந்தால், அவர்களின் நிழல் ஒரு கணம் மறைந்துவிடும். அவர்களால் தங்கள் சொந்த நிழலைப் பார்க்க முடியாது. வேறு யாராவது அதைப் பார்க்கலாம். இந்த நிலைமை, 4ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான 10 நாட்களுக்கு நீடிக்கும்.

"4ஆம் திகதி, சூரியன் நம் நாட்டிற்குள் நுழையும். அதாவது இந்த உச்சம்பெருதல், பருத்தித்துறைமுனையில் தொடங்கும். ஏப்ரல் 5ஆம் திகதி எலமல்தெனிய, ஏப்ரல் 6ஆம் திகதி களுத்துறை, ஏப்ரல் 7ஆம் திகதி கொழும்பு - களனி, ஏப்ரல் 8ஆம் திகதி நைனாதீவு - மஹியங்கனை போன்ற பகுதிகளில் சூரியன் உச்சம் பெரும். 15ஆம் திகதி பருத்தித்துறை முனையிலிருந்து சூரியன் நம் நாட்டை விட்டு வெளியேறும்” என்று அவர் மேலும் கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி