1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

19 வயதுக்கு உட்பட்ட இலங்கை

கிரிக்கெட் அணியின் கெப்டனாக இருந்த தம்மிக்க நிரோஷனை சுட்டுக் கொன்ற நபரை 24 மணி நேரத்துக்குள் கைது செய்ய முடிந்துள்ளதாகவும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இரண்டு முறை தம்மிகவை கொலை செய்ய முயன்றதாகவும் தெரிவித்துள்ள அவர் தனது இலக்கை மூன்றாவது முறையாக அடைய முடிந்ததாகவும் கூறியுள்ளார்

மேலும், விசாரணையின்போது, ​​தம்மிக்க நிரோஷனை  இத்தாலி மற்றும் டுபாயில் இருவரின் திட்டத்துக்கமையவே கொலை செய்ததாகவும் இத்தாலியில் வசிப்பவர்களே  துப்பாக்கியை வழங்கியதாகவும் துப்பாக்கிச்  சூடு நடத்திய நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

தம்மிக நிரோஷனின் கொலையில் தன்னுடன் மூன்று பேர் ஈடுபட்டதாகவும், தான் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டிருந்தபோது, ​​மற்றொரு நபர் தம்மிகவை கத்தியால் குத்தியதாகவும் அவர்  தெரிவித்தார்.

சிசிரீவி காட்சிகள் மூலம் முழுமையான விசாரணைக்குப் பிறகு, துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் கைது செய்வர்.

தம்மிக்கவின் கொலைக்குப் பின்னர், சந்தேக நபர் நெடுஞ்சாலையில் பயணிக்கும் காட்சியைப் பின்தொடர்ந்த அதிகாரிகள், தம்மிகவைக் கொல்லப் பயன்படுத்திய கையுறைகளை அப்பகுதியில் உள்ள கால்வாயில் வீசுவதைக் காட்டும் படச்சட்டத்தை அவதானித்த பின்னர் அவரை அடையாளம் கண்டனர்.

இவரைத் தவிர, தம்மிக்கவின் கொலைக்கு மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் அவரிடமிருந்தே கைப்பற்றப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி