தனது 3 பிள்ளைகளையும்

பொலிஸில் ஒப்படைத்த தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சி!

தனது மூன்று பிள்ளைகளை ஹட்டன் பொலிஸ் மகளிர் பணியகத்தில் ஒப்படைத்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற  தாய் ஒருவரை ஹட்டன் பொலிஸ் மகளிர் பணியக அதிகாரிகள் தடுத்து  அவரை டிக்ஓயா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 
 
ஹட்டன் டிக் ஓயாவைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான இவர், தனது கணவருடன் வாழ முடியாது எனவும் ஹட்டன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
 
பின்னர், 08, 06, 04 வயதுடைய இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உட்பட மூன்று குழந்தைகளையும் பொலிஸ் பொறுப்பில் எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
 
பின்னர் ரயில் நிலையத்துக்குச் செல்ல முற்பட்ட போது, ​​ஹட்டன் பொலிஸ் நிலைய மகளிர் திணைக்களத்தினர் அவரைத் தடுத்து வைத்தியசாலையில் அனுமதித்ததுடன்  மூன்று குழந்தைகளையும் அவர்களது தந்தையிடம் ஒப்படைத்துள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி