அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற அவசர

தொலைபேசி இலக்கமானது 24 மணித்தியாலங்களும் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தயாராகவிருப்பதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

சேவைகளுக்கு நேரடியாக பங்களிக்க வேண்டிய அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளின் இணைப்பு மற்றும் வசதிகளை இது எளிதாக்கும் என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக நட்டில் ஏற்பட்டுள்ள அவசர நிலைமைகள் குறித்து அறிவிப்பதற்காக பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்ட விசேட நடவடிக்கை அறையின் தொலைபேசி இலக்கங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

நேற்று (02) மாலை 06.00 மணி முதல் பொலிஸ் தலைமையகத்தில் 24 மணித்தியால விசேட அதிரடிப் பிரிவு நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்படி, 011 2 42 18 20 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக விசேட நடவடிக்கை அறைக்கு தொடர்பு கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், 011- 2 43 92 12, 011 - 20 130 36 அல்லது 011- 20 130 39 ஆகிய எண்களுக்கு அழைப்பதன் மூலமும் தகவல்களை வழங்க முடியும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி