அதிவேகமாகவும் அதிக ஒலி எழுப்பக் கூடியதுமான

சைலன்சர் பொருத்தியும் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்துவதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார் சுமார் பத்து கிலோ மீற்றர் தூரம் மோட்டார் சைக்கிளைத் துரத்திச் சென்று துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு மத்தியிலும் மோட்டார் சைக்கிளை தொடர்ந்து செலுத்திச் சென்றதாகக் கூறப்படும் 19 வயதுடைய இளைஞன், மோட்டார் சைக்கிளை தன்னுடன் எடுத்துச் சென்று பின்னர் சூரியவெவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞனின் கால் ஒன்று காயமடைந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் நிலையத்தைச் சென்றடைந்த இளைஞனை சந்தேகத்தின் பேரில் கைது செய்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி