(எச்.எம்.எம்.பர்ஸான்)

மோட்டார் சைக்கிள் விபத்தில்
இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
இந்த விபத்துச் சம்பவம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருக்கள்மடம் பகுதியில்  இன்று சனிக்கிழமை (1) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
 
குறித்த மோட்டார் சைக்கிளில் இரு இளைஞர்கள் அதிவேகமாக பயணித்தபோது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியுள்ளது.
 

IMG 20240601 223752 800 x 533 pixel

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய  இளைஞர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்த மற்றையவர் ஸ்தலத்திலேயே  உயிரிழந்துள்ளார்.
 
விபத்துக்குள்ளான இருவரும் களுதாவளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
 
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி