தனியார் பல்கலை  மாணவர்களுக்கு  பட்டப் படிப்புகளுக்கு வழங்கப்படும் வட்டியில்லாக் கடன் வரம்பு பத்தாயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சு வட்டாரங்கள் இதனைத் தெரிவித்தன.

மேலும், இம்முறை கடனைப் பெறுவதற்கான

பிணை நிபந்தனைகளும் அதிகரிக்கப்படவுள்ளன.

தற்போது தனியார் பல்கலைக்கழகங்களில் பதிவு செய்துள்ள மாணவர்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் பணியை உயர்கல்வி அமைச்சு நேற்று (28) நிறைவு செய்துள்ளது.

அந்தத் தகவலின் அடிப்படையில் இம்முறை கடன் வழங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.

இவ்வருடம் மாணவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாகவும் தேவைப்பட்டால் இன்னும் கூடுதலான மாணவர்களுக்கு கடனுதவி வழங்க முடியும் எனவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தக் கடன் திட்டத்தில் இதுவரை ஏழு கமாணவர் குழுக்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த மாணவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட அதிகபட்ச கடன் வரம்பு 8 இலட்சம் ரூபா.

நான்கு ஆண்டுகள் பட்டப்படிப்புக்கு எட்டு இலட்சம் ரூபாவும் மூன்றாண்டுகள்  படிப்புக்கு ஆறு லட்சம் ரூபாவும் வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு இந்த கடன் திட்டத்தில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 3,500 பேர்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி