கொழும்பு பகுதியில் உள்ள

கால்வாயில் ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (29) மாலை கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டேஸ்புர பகுதியில் பெண் ஒருவரின் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
இவரின் அடையாளம் இதுவரை தெரியவில்லை என்பதுடன், சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர் 4 அடி 9 அங்குல உயரம் கொண்ட 45 முதல் 50 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இவர் மஞ்சள் பூக்கள் கொண்ட சிவப்பு நிற ஆடையை அணிந்துள்ளார்.
 
இது தொடர்பில் பொலிஸார்  விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி