முதல் மற்றும் இரண்டாம் நிலை தொடர்புகள் மற்றும் வெளிநாட்டிலிருந்து வருகை தந்து பதிவுசெய்யப்பட்ட நபர்கள் உட்பட மொத்தமாக கொரோனா தொற்று சந்தேக நபர்களின் எண்ணிக்கை 42,000 ஐ தாண்டியுள்ளது என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்ட அறிக்கை தவறானது என்று இராணுவ தளபதி ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய நிலைமை எழுந்துள்ளது.

மொத்த எண்ணிக்கை 48,000 என்று இராணுவத் தளபதி ஊடகங்களுக்கு அறிவித்தபோது, ​​உண்மை நிலை பொதுமக்களுக்கு தெறியவந்தது.

எவ்வாறாயினும் 3500 பேருக்கு பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், மொத்த எண்ணிக்கை, குறிப்பிட்ட இலக்கை எட்டியுள்ளதாக அரச சார்பு வலைத்தளம், lankaleadnews.com கூறுகிறது.

பரிசோதனை நடவடிக்கைகளைகளை அதிகரிக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்!

இதற்கிடையில், lankaleadnews.com இன் அறிக்கை, கடந்த இரண்டு வாரங்களில், மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் தேசிய அமைப்புகளால் இந்த நோய் வந்ததாக சந்தேகிக்கப்படும் அனைத்து நபர்களும் பரிசோதனைநடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் சுகாதார அமைச்சு அனைவருக்கும் தேவையில்லை 3500 பேரை  முதலில் சோதித்தால் போதுமானது என்று கூறியது.

கியூபா ஒரு மில்லியன் மக்களுக்கு சோதனை செய்கிறது. இலங்கை இதில் 850 பேருக்கு சோதனை செய்து வருகிறது. அதிலும் 152 பேருக்கு மாத்திரமே சோதனை முடிந்துள்ளதாக lankaleadnews.com தெரிவித்துள்ளது.

இருப்பினும், ஜனாதிபதிக்கும் சிறப்பு மருத்துவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது, ​​பரிசோதனையை  மேலும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய அமைப்புகளால் முன்வைக்கப்பட்ட ஐந்து பக்க மூலோபாய அணுகுமுறையில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார் என்று வைத்தியர் குணதாச அமரசேகர குறிப்பிட்டுள்ளார்.

லங்கா முன்னணி செய்தி ஆராய்ச்சி பிரிவு

இதற்கிடையில், திங்களன்று சுகாதார பணிப்பாளர் நாயகம் வாக்குறுதியளித்தபடி, சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான கொள்கை மற்றும் திட்டம் இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்று லங்கா முன்னணி செய்தி ஆராய்ச்சி பிரிவு கூறுகிறது.

தங்களது மூலோபாய திட்டத்தை தாமதப்படுத்தியதற்காக பிரிட்டனின் சுகாதார செயலாளர் பொதுமக்களிடம் மன்னிப்பு  கேட்டுள்ளதாக அறியக்கிடக்கின்றது. 

இருப்பினும், அவர் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான ஐந்து பக்க மூலோபாய அணுகுமுறையை வெளியிட்டுள்ளார்.

மூலோபாய திட்டத்தின் எதிர்காலம் குறித்த ஒரு திட்டத்தை சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு உறுதியளித்தால் மக்கள் நம்பிக்கையையும் ஆதரவையும் பெறுவது எளிதாக இருக்கும்.

உலகின் பல நாடுகளைப் போலவே, சீனா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பொருட்களின் பற்றாக்குறை இருப்பதால், இரு அரசாங்கங்களுக்கிடையில் பொருட்களை  பறிமாறிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிய வருகின்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி