40 இலட்சம் ரூபா பெறுமதியான தொலைபேசி

கம்பிகளைத் திருடி வென்னப்புவ பகுதியில் உள்ள பழைய  இரும்புக் கடைகளுக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் அந்தத் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றிய 7 தொழில்நுட்ப  உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். 

வென்னப்புவ துனுவில சந்தி மற்றும் கிரிமதியான சந்திக்கு இடையில் சுமார் 4 கிலோமீற்றர் தூரத்துக்கு பதிக்கப்பட்டிருந்த நிலத்துக்கடியிலான இவ்வாறு அறுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுனேரிய, மாரவில, தொடுவாவ, கொஸ்வத்தை, ஆனமடுவ, கொபேகனே ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 38, 43, 37, 35, 51, 45, மற்றும் 56 வயதுடைய 7 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வென்னப்புவ பிரதேசத்தில் டெலிகொம் நிறுவனத்தினால் போடப்பட்டிருந்த நிலத்தடி தொலைபேசி இணைப்புக் கம்பிகளை சிலர் வெட்டிக் கொண்டிருந்ததனை அவதானித்த பொதுமக்களே இது தொடர்பில் தகவல் வழங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி