இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண

தரப்  பரீட்சைக்கு தோற்றிய  சில மாணவர்களுக்கு  புவியியல் பாடத்தின் வினாத்தாளின் ஒரு பகுதியை வழங்கப்படாத  சம்பவம் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மினுவாங்கொடை அல்அமீன் முஸ்லிம் கல்லூரியின்  பரீட்சை நிலையத்தில் பணிபுரிந்த அதிகாரிகளிடம் பரீட்சை திணைக்களம் இது தொடர்பில்  விசாரணை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பரீட்சார்த்திகள் எவருக்கும் அநீதி இழைக்கப்படவில்லை என பரீட்சை திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர்  தெரிவித்துள்ளார்.
.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி