நாட்டின் நலனுக்காக யாருடனும் இணையவும் பிரிந்து செல்லவும்

தயாராகவிருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

தேசிய தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அதன் ஸ்தாபகர் பசில் ராஜபக்க்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்கப் போகிறீர்களா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளிக்கும்போதே பசில் ராஜபக்க்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜூன் 18ஆம் திகதி பொதுஜன பெரமுன தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நிலைப்பாட்டை அறிவிப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என பசில் ராஜபக்க்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி