ஐக்கிய மக்கள் சக்தியை பதிவு செய்தவர் மறைந்த முன்னாள் அமைச்சர்

மங்கள சமரவீர என்ற விடயம் மாத்தறை அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு தெரியாதது ஆச்சரியமான விடயமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

காஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் கூறிய சில தவறான வழிகாட்டுதல்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த அவர், 2020 பெப்ரவரி மாதம் முதல் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் தலைவர் சஜித் பிரேமதாச எனவும் தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் வழங்கப்பட்டபோது ரஞ்சித் மத்தும பண்டார வேட்பு மனுவில் கையொப்பமிட்டதாக எரான் விக்கிரமரத்ன குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அறிவித்து, ரஞ்சித் மத்தும பண்டாரவின் நியமனத்தை சட்டபூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி