ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள், மாவட்ட  அரசாங்க அதிபர்கள்  மற்றும்

நீதித்துறை அதிகாரிகளுக்கு சுங்கவரியுடன் கூடிய  வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கட்டாய ஓய்வு வயது 65 ஆக நீடிக்கப்பட்டு, பின்னர் 60 ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், அந்தக் காலகட்டத்தில் 65 வயது பூர்த்தியடைந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கும்  இந்தச் சலுகை வழங்கப்படவுள்ளது.

 கடந்த மாத்  11ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வரியில்லா வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்குமாறு 105 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி