இரண்டு தேசிய அடையாள அட்டைகள் மற்றும் தவறான ஆவணங்களை

தயாரித்ததற்காக தேடப்படும் சந்தேக நபரைக் கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

28.03.2013 இல்  ஆட்பதிவுத் திணைக்களத்தினால் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி,  கீழ்வரும் விபரங்களைக் கொண்ட நபர் போலி ஆவணங்களை ஆட்பதிவு திணைக்களத்தில் சமர்ப்பித்துள்ளதாக விசாரணையின் போது தெரிய வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பெயர்: வெலவகே ரஷ்மி நுவன்
முகவரி: இல. 141/1 வெல்லவீதிய, நீர்கொழும்பு

இந்த சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.  071 8594915 / 011 2395371

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி