பலாங்கொடை பிரதேசத்தில் கடந்த மூன்று மாதங்களில் மாரடைப்பு

காரணமாக 30-50 வயதுக்கு இடைப்பட்ட 70 சத வீத மரணங்கள் மாரடைப்பு காரணமாக ஏற்பட்டுள்ளதாக பலாங்கொடை மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்துள்ளார்.

இந்த தரவுகளின்படி, மாரடைப்பால் மரணிக்கும. போக்கு குறிப்பாக இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடையவர்களிடையே அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு திடீரென வயிற்றில் வீக்கம், மயக்கம், வலிப்பு ஏற்பட்டால் இரத்தப் பரிசோதனை, ஈசிஜி பரிசோதனை செய்ய வேண்டும் என்றார்.

மேற்குறிப்பிட்ட அவசரகால நிலைமைகளுடன் ஏற்படும் மாரடைப்புகளில் இருந்து 30-50 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுபெனவும் பத்மேந்திர விஜேதிலக்க மேலும் தெரிவித்தார்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி