2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக, சுமார் 10 இலட்சம் புதிய வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்று,

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு, 16,000,000 (ஒரு கோடி அறுபது இலட்சம்) வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்தனர்.

இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை, 17,000,000 வாக்காளர்களாக அதிகரித்துள்ளதென, சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன என பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இந்த புதிய வாக்காளர்கள் 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி