கொழும்பு மேல் நீதிமன்றத்தினால், 7 மீனவர்களுக்கு மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு மீனவப் படகொன்றை கடத்தி மூவரை கொலை செய்த சம்பவம் தொடர்பிலான வழக்கிலேயே, இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 15.10.2012 அன்று, இலங்கைக் கடற்கரையில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டவர்களை ஏற்றிச் சென்ற ‘தேஜான்” என்ற மீன்பிடிக் கப்பலை கடத்திச் சென்ற 7 மீனவர்கள், மூன்று மீனவர்களைக் கொன்றதுடன், பல மீனவர்களைக் கடுமையாகக் காயப்படுத்தியதுடன் படகை கடத்தி அவுஸ்திரேலியா அனுப்பி வைத்துள்ளனர் .

இதன்படி இன்று (24) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

வழக்கின் 10வது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த பிரதிவாதியை அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்குமாறும் உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மரணதண்டனை விதிக்கப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளுக்கு மேலதிகமாக, ஏனைய ஆறு குற்றச்சாட்டுகளுக்கும் பிரதிவாதிகளுக்கு 29 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்த நீதிபதி, தலா 2 மில்லியன் ரூபா 8500 அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டார்.

மரண தண்டனைக்கு மேலதிகமாக விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைகளையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

11 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். மூன்று பிரதிவாதிகள் வழக்கு விசாரணையின் போது அல்லது விசாரணை ஆரம்பிக்கும் முன்னரே இறந்துவிட்டதால், 8 பிரதிவாதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் நடத்தப்பட்டன.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி