“ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்குவதாக யார் தெரிவித்தாலும், தற்போதுள்ள செயற்பாடடு அரசியலில் அதற்கு

தகுதியானவர் ரணில் விக்ரமசிங்கவை தவிர வேறு யாரும் இல்லை. அத்துடன் ரணில் விக்ரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும். அதற்காக அந்த கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருக்காது” என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

“நாடு வங்குரோத்து அடைந்தபோது நாட்டை பொறுப்பெற்க யாரும் முன்வரவில்லை. பல்வேறு காரணங்களை தெரிவித்துக்கொண்டு பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதில் இருந்து நலுவிச்சென்றவர்கள் தற்போது அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடப்போவதாக தெரிவித்து வருகின்றனர்.

“ஆனால் நாடு வங்குராேத்து அடைந்தபோது, தனி நபராக இருந்துகொண்டு அந்த பொறுப்பை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டார்.

“அதேபோன்று நாட்டை கட்டியெழுப்ப சில கஷ்டமான தீர்மானங்களை தைரியமாக முன்னெடுத்தார். அதன் காரணமாகவே நாட்டை வங்குராேத்து நிலைமையில் இருந்து மீட்டு, மக்கள் ஓரளவேனும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியுமாகி இருக்கிறது.

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அனுபவம் மற்றும் சர்வதேச நாடுகளுடன் அவருக்கும் இருக்கும் நீண்டகால தொடர்புகள் காரணமாகவே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமாகி இருக்கிறது.

“இவ்வாறான நிலையி்ல் அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்குவதற்கு தற்போதுள்ள அரசியல்வாதிகளில் ரணில் விக்ரமசிங்கவை தவிர தகுதியான வேறு யார் இருக்கிறார் என கேட்கிறோம்.

“அத்துடன் ரணில் விக்ரமசிங்க பொது வேட்பாளராக களமிறங்கினால் அவருக்கு அனைத்து மக்களும் ஆதரவளிக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமையை பெற்றால், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க முடியும் என அந்த கட்சியின் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.

“என்றாலும் இதற்கு முன்னர் பொது வேட்பாளராக பலர் களமிறங்கி இருக்கின்றனர். அப்போது நாங்கள் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கிறோம்.

“அதேபோன்று அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க பொது வேட்பாளராக களமிறங்குவது நிச்சயமாகும். அது தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடி அவர்களின் அவர்களின் இணக்கப்பாட்டை எமக்கு பெற்றுக்கொள்ள முயும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது” என்றார்.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (02) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன, “நாட்டின் தற்போதைய நிலையில் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதன் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும்” என்றார்.

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடப்போவதாக தெரிவிப்பவர்களால் நாட்டில் என்ன செய்ய முடியும் என கேட்கிறோம். அத்துடன் யுத்தத்தை வெற்றிகொண்ட மஹிந்த ராஜபக்ஷ் தற்போது நாட்டின் பொருளாதாரத்தை வெற்றிகொள்ளவே ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்து வருகிறார் எனவும் அவர் தெரிவித்தார்.

“அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக தற்போது பலரும் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு தெரிவிப்பவர்கள் தேர்தலில் வெற்றிபெற்றால் அவர்களால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப என்ன செய்ய முடியும்?. இவர்களின் ஏமாற்று பேச்சுக்களுக்கு மக்கள் மீண்டும் ஏமாந்துவிடக்கூடாது.

“அதேநேரம் போராட்ட காலத்தில் மொட்டு கட்சி மக்களுக்கு அடிபணிந்து செயற்பட்டபோதும்  சர்வதேசத்தின் கோரிக்கைக்கைக்கு அடிபணியாமல் எடுத்த தீர்மானத்துக்கு நன்றி தெரிவிக்கிறோம்” என்றார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி