பஸ்யால - மீரிகம வீதியின் கலேலிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார்

தெரிவித்துள்ளனர்.

வீதியில் பயணித்த பூம் ட்ரக் (boom truck) ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து 8 முச்சக்கரவண்டிகள், கார் ஒன்று மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பூம் ட்ரக்கின் தடுப்பான் செயலிழந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி